Posts

Current Affairs

தமிழ்நாட்டில் மின் தேவையின் அதிகரிப்பு

660-மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலைய (ETPS) விரிவாக்கத் திட்டம் ஆனது மின் விநியோகக் கட்டமைப்பின் மீது நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், மின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும்.  மாநிலத்தின் மின் தேவை ஒவ்வோர் ஆண்டும் 10% அதிகரித்து வருகிறது. 11,000 மெகாவாட் என்ற காற்றாலை ஆற்றல் உற்பத்தி திறனுடன், தமிழ்நாடு மாநிலம் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. சூரிய ஆற்றல் உற்பத்தி திறன் அடிப்படையில், 9,400 மெகாவாட் திறனுடன் மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அலகுகள் அளவிலான கூடுதல் பசுமை ஆற்றல் திறனை உற்பத்தி செய்வதற்கு மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் எரிசக்தித் தேவையில் 50 சதவீதமானது, பசுமை எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாடு பசுமை ஆற்றல் நிறுவனம் லிமிடெட் ஆனது மாநிலத்தின் பசுமை ஆற்றல் உற்பத்தி முன்னெடுப்புகளை மேற்பார்வை செய்து வருகிறது.

Current Affairs

Increasing power demand in Tamilnadu

❖ The 660-MW Ennore Thermal Power Station (ETPS) expansion project would help to ensure grid stability and increase power generation. ❖ The State’s power demand is increasing by 10% every year. ❖ With 11,000 MW of the wind energy capacity, Tamil Nadu ranks second in the country. ❖ In terms of the solar energy capacity, the State ranks third with a capacity of 9,400 MW. ❖ The State has set a target of adding additional green energy capacity of 100 billion units by 2030. ❖ It has set a target that 50% of its energy needs should be met by green energy by 2030. ❖ The Tamil Nadu Green Energy Company Ltd oversees the state’s green energy initiatives.

Current Affairs

துளசி கௌடா காடுகளின் கலைக்களஞ்சியம்

கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான துளசி கௌடா காலமானார். அவர் ஹலக்கி பழங்குடியின சமூகத்தினரால் "மரங்களின் தெய்வம்" என்று போற்றப் படுகிறார். அவர் 'காடுகளின் கலைக்களஞ்சியம்' என்றும் அழைக்கப்படுகிறார். கௌடா கர்நாடகா முழுவதும் 1 லட்சம் மரங்களை நட்டு வளர்த்தப் பெருமையினை கொண்டுள்ளார். அவர் ஒரு சமூக வளங்காப்பகம், ஐந்து புலிகள் வளங்காப்பகங்கள், 15 பாதுகாப்புச் சரணாலயங்கள் மற்றும் 30 வனவிலங்குச் சரணாலயங்கள் உள்ளிட்டப் பலவற்றினை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றினார்.

Current Affairs

மேற்கூரை சூரிய மின்னாற்றல் உற்பத்தி அமைப்பு நிறுவல்கள்

பிரதான் மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா என்ற திட்டத்தின் கீழ், குஜராத், மகாராஷ்டிரா, மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை மிக அதிக எண்ணிக்கையிலான மேற்கூரை சூரிய மின்னாற்றல் உற்பத்தி அமைப்பின் நிறுவல்களைக் கொண்ட முதல் மூன்று மாநிலங்களாக உருவெடுத்துள்ளன. இத்திட்டத்தின் கீழ், இந்த நிறுவல்கள் ஆனது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 10 லட்சம் எண்ணிக்கையினைத் தாண்டும் எனவும், அக்டோபர் மாதத்திற்குள் 20 லட்சம் என்ற எண்ணிக்கையில் இருமடங்காக உயரும் எனவும், 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 40 லட்சம் எண்ணிக்கையினை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  இன்றுவரை நிறுவப்பட்டுள்ள மொத்த நிறுவல்களில் சுமார் 88 சதவீதமானது ஆறு மாநிலங்களில் நிறுவப்பட்டுள்ளன. 55,000க்கும் மேற்பட்ட நிறுவல்களுடன் கேரளா நான்காவது இடத்திலும், 21,000க்கும் மேற்பட்ட நிறுவல்களுடன் தமிழ்நாடு ஐந்தாவது இடத்திலும், அதனைத் தொடர்ந்து 20,000க்கும் அதிகமான நிறுவல்களுடன் இராஜஸ்தானும் இதில் இடம் பெற்றுள்ளது.  இந்தத் திட்டம் 1,000 பில்லியன் அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வை 720 மில்லியன் டன்கள் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Current Affairs

Tulsi Gowda - Encyclopedia of Forests

❖ Padma Shri awardee Tulsi Gowda, an environmentalist from Karnataka, passed away ❖ She is revered as the “tree goddess” by the Halakki tribal community. ❖ She is known as the ‘encyclopaedia of forest’. ❖ Gowda has been credited with planting and nurturing over 1 lakh trees across Karnataka. ❖ Her contributions have strengthened one community reserve, five tiger reserves, 15 conservation reserves, and 30 wildlife sanctuaries.

Current Affairs

மக்களைத் தேடி மருத்துவம் 2024

தமிழ்நாடு மாநில அரசின் மிகவும் முதன்மை சுகாதாரத் திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் (MTM) ஆனது, இரண்டு கோடி மக்களுக்குப் பயனளித்துள்ளது. இந்தத் திட்டம் ஆனது, மாநிலம் முழுவதும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு விரிவான வீடு தேடி சேவை வழங்கீடு அடிப்படையிலான சுகாதாரச் சேவைகளை வழங்குகிறது. இது 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப் பட்டதோடு இது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குப் பயனளிக்கிறது. இதில் நோயாளிகளுக்கு உடலியக்க மருத்துவச் சிகிச்சையும் வழங்கப்படுகிறது. இத்திட்டம் ஆனது மாநிலத்தில் 8,713 சுகாதார துணை மையங்களுடன் 385 கிராமப்புற தொகுதிகளுக்கும், 460 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் சேர்த்து 21 மாநகராட்சிகளுக்கும் சேவையினை வழங்கி வருகிறது. இத்திட்டத்திற்காக, தமிழக மாநிலத்தின் சுகாதாரத் துறைக்கு 2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் முகமைகளுக்கு இடையிலான பணிக்குழு விருதானது வழங்கப் பட்டுள்ளது.

Current Affairs

Makkalai Thedi Maruthuvam 2024

❖ The Tamilnadu State government’s flagship health scheme, Makkalai Thedi Maruthuvam (MTM) crossed a coverage of two crore persons. ❖ The scheme provides the comprehensive home-based healthcare services for the hypertension and diabetes across the State. ❖ It was launched by CM in Krishnagiri district on August 5, 2021 and it benefits people aged over 45. ❖ Physiotherapy treatment is also provided to patients .❖ The scheme covers 385 rural blocks with 8,713 health sub-centres, and 21 corporations with 460 urban primary health centres in the State. ❖ For this scheme, the UN Inter-Agency Task Force award for 2024 was conferred upon the State’s Health Department.

Current Affairs

Rooftop solar installations 2024

❖ Gujarat, Maharashtra, and Uttar Pradesh have emerged as the top three states with the highest number of rooftop solar installations under the PM Surya Ghar Muft Bijli Yojana scheme. ❖ Under the scheme, installations are expected to cross 10 lakhs by March 2025, double to 20 lakhs by October 2025, and reach 40 lakhs by March 2026. ❖ Six States account for about 88 per cent of the total installations to date. ❖ Kerala stands 4th with more than 55,000, Tamil Nadu in 5th place with over 21,000 and followed by Rajasthan with more than 20,000. ❖ The scheme is projected to generate 1,000 billion units of electricity and reduce CO2 emissions by 720 million tonnes.

Current Affairs

அஸ்வின் ஓய்வு

இந்தியக் கிரிக்கெட் வீரர் இரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது 14 ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தினை டெஸ்ட் போட்டிகளில் எடுத்த 537 விக்கெட்டுகளுடன் நிறைவு செய்துள்ள நிலையில் இது அனில் கும்ப்ளேவின் 619 விக்கெட்டுகள் என்ற சாதனைக்கு அடுத்த நிலையில் உள்ளது. அஸ்வின் 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் T20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பல்வேறு வடிவத்திலான கிரிக்கெட் போட்டிகளில் 765 சர்வதேச விக்கெட்டுகளுடன், கும்ப்ளேவுக்கு (953) அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது அதிக கிரிக்கெட் விக்கெட்டுகளை வீழ்த்திய கிரிக்கெட் வீரராக அஷ்வின் திகழ்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். தற்போது 41 போட்டிகளில் 195 வீரர்களை ஆட்டமிழப்பு செய்ததுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மிக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முன்னணியில் அவர் உள்ளார்.

Current Affairs

Ashwin’s retirement

❖ The Indian cricketer Ravichandran Ashwin has announced his retirement from the international cricket. ❖ He ended his 14-year journey with 537 Test wickets, which is only second to Anil Kumble's 619 wickets. ❖ Ashwin played 116 ODIs, taking 156 wickets. In 65 T20Is, he claimed 72 wickets. ❖ With 765 international wickets across formats, Ashwin is India's second-highest wicket-taker, behind Kumble (953). ❖ He achieved the distinction of being the first bowler to reach 100 wickets in World Test Championship. ❖ He also currently leads WTC's wicket-taking charts with 195 dismissals in 41 matches.