Posts

Current Affairs

பருவநிலையின் நிலை குறித்த அறிக்கை 2024

அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பருவ நிலை மாநாட்டின் (COP29) போது உலக வானிலை அமைப்பின் (WMO) 2024 ஆம் ஆண்டு பருவ நிலையின் நிலை குறித்த அறிக்கையானது வெளியிடப்பட்டது. 2024 ஆம் ஆண்டு ஆனது இதுவரையில் பதிவான ஒரு வெப்பமான ஆண்டாக இருக்கும் என்பதால் இந்த அறிக்கை ஒரு சிவப்பு (அபாய) எச்சரிக்கையை வெளியிட்டது. இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையில், உலக சராசரி வெப்பநிலை என்பது தொழில்துறை காலத்திற்கு முந்தைய காலத்தில் பதிவான ஒரு அளவை விட 1.54 டிகிரி அதிகமாக இருந்தது. இருப்பினும், பல தசாப்தங்களாக நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் வெப்ப மயமாதல் தடுப்பு நடவடிக்கைகள் ஆனது இந்த வெப்பநிலையினை 1.5 டிகிரிக்கு கீழே கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. WMO அறிக்கையானது, 2014-2023 காலக் கட்டம் வரையில், உலகளாவியச் சராசரி கடல் மட்டம் ஆண்டிற்கு 4.77 மில்லி மீட்டர் உயர்ந்துள்ளதாக கூறுகிறது. 1993 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலத்தில் இருந்த விகிதத்தை விட இது இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுமார் 93% நாட்களில் இந்தியா தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர் கொண்டது. பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகியவை 34 நாட்களில் தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர் கொண்டதால், அவை மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களாகும். அவற்றைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகியவை முறையே 27 மற்றும் 26 நாட்களில் தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர் கொண்டன. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் நிலவரப்படி 55% நாடுகளில் மட்டுமே பல் இடர் முன்னெச்சரிக்கை அமைப்பு (MHEWS) உள்ளது.

Current Affairs

ஆரோ-3 எறிகணை இடைமறிப்பு அமைப்பு

ஜெர்மன் நாட்டில் இஸ்ரேலின் அரோவ்-3 எறிகணை இடைமறிப்பு அமைப்பின் முதல் நிறுவுதல் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும். ஆரோ 3 அமைப்பு ஆனது, ஆரோ -2 மற்றும் ஆரோ -3 ஆகிய எறிகணை இடைமறிப்பு அமைப்புகளையும் உள்ளடக்கியது. இது மிக நீண்ட தூர வரம்பிலான எறிகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு கூட்டுறவின் மூலம் உருவாக்கப் பட்டது. ஆரோ-3 அமைப்பை சுமார் 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ஜெர்மனி நாட்டிற்கு விற்பதற்கு இஸ்ரேல் கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டது என்ற நிலையில் இது இன்று வரை பதிவாகாத அதன் மிகப்பெரிய பாதுகாப்பு துறை சார் விற்பனையாகும். எறிகணைகள் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவதற்கு முன்பு அவற்றைத் தாக்கும் சிறப்புத் திறனை ஆரோ -3 கொண்டுள்ளது.

Current Affairs

Arrow-3 Missile Interception System

❖ The initial deployment of Israel's Arrow-3 missile interception system on German soil will took place in 2025. ❖ The Arrow system includes the Arrow-2 and Arrow-3 interceptors. ❖ It was developed in cooperation between Israel and the United States to counter long-range ballistic missile threats ❖ Israel agreed last year to sell the Arrow-3 system to Germany in a $3.5 billion deal, its biggest defence sale to date. ❖ Arrow-3 specialises in knocking out missiles before they re-enter the Earth's atmosphere.

Current Affairs

'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் இரண்டாம் கட்டம்

 தமிழக அரசானது, அரியலூரில் 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினைத் துவக்கியுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து வழங்கீட்டுத் திட்டமாகும் இது.  பிறப்பு முதல் சுமார் ஆறு மாதங்கள் வயதான வரையிலான 76,700 குழந்தைகளின் தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக இதில் அடையாளம் காணப் பட்டு உள்ளனர்.  அவர்களுக்கு இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மொத்தம் 22 கோடி ரூபாய் செலவில் பயன்கள் வழங்கப்படும். 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் முதல் கட்டம் ஆனது, ஊட்டச் சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் கண்டுள்ளது.  அரசாங்கத்தின் இந்தத் திட்டத்திற்குப் பிறகு, அவர்களில் சுமார் 77.3% பேரின் ஊட்டச் சத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, இயல்பு நிலைக்கு முன்னேறியுள்ளது.

Current Affairs

Phase II of ‘Uttachathai Uruthi Sei’

❖ Tamil Nadu government launched the second phase of ‘Uttachathai Uruthi Sei’ programme in Ariyalur. ❖ It is a nutritional intervention programme for malnourished children and their mothers. ❖ Mothers of over 76,700 babies in the age group of zero to six months are identified as malnourished. ❖ They would be covered under Phase II of the programme at a total cost of ₹22 crore. ❖ Phase I of the programme launched in 2022 identified the malnourished children. ❖ After the government’s intervention, 77.3% of them have showed an improvement and progressed to normal levels.

Current Affairs

UNFCCC COP 29

2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற மாநாடு (COP29) ஆனது அஜர்பைஜானின் பாகு நகரில் தொடங்கியது.  புவி மேலும் வெப்பமடைவதைத் தடுப்பதற்காகப் பகிரப்பட்ட திட்டத்தை உருவாக்க உலக நாடுகளை ஒன்றிணைப்பதே COP29 மாநாட்டின் முதன்மையான குறிக்கோள் ஆகும். இது பருவநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளைச் சமாளிக்க வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவும் வகையில் பருவநிலை நிதியை அதிகரிப்பதின் மீது முக்கியக் கவனம் செலுத்தும்.  பருவநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு உடன்படிக்கை (UNFCCC) எனப்படும் ஒரு சர்வதேச ஒப்பந்தம் ஆனது 1992 ஆம் ஆண்டில் கையெழுத்து ஆனது.  1997 ஆம் ஆண்டில் கியோட்டோ நகரில் (ஜப்பான்) நடைபெற்ற மூன்றாவது பங்குதாரர் மாநாட்டில் (COP3) பங்குதாரர் நாடுகள் கியோட்டோ நெறிமுறையை ஏற்று கொண்டன. பாரீஸ் நகரில் நடைபெற்ற COP21 மாநாட்டில் 196 பங்குதாரர் நாடுகள் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரீஸ் உடன்படிக்கையினை ஏற்றுக் கொண்டன என்ற வகையில் இது சட்டப் பூர்வமாக பிணைக்கப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். 2021 ஆம் ஆண்டில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற COP26 என்ற மாநாட்டின் போது கிளாஸ்கோ உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டது. துபாயில் நடைபெற்ற COP28 மாநாட்டில், இழப்பு மற்றும் சேத நிதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்தப் பட்டது.

Current Affairs

UNFCCC COP 29

❖ The 2024 United Nations Climate Change Conference (COP29) kicked off in Baku, Azerbaijan. ❖ The primary goal of COP29 is to bring together countries to develop a shared plan for curbing further global warming. ❖ It will also focus on scaling up climate finance to help developing nations tackle the adverse effects of climate change. ❖ The United Nations Framework Convention on Climate Change (UNFCCC), an international treaty, was signed in 1992. ❖ In COP3 at Kyoto (Japan) in 1997, the parties adopted the Kyoto Protocol. ❖ At COP21 in Paris, 196 parties adopted the landmark Paris Agreement, a legally binding international treaty. ❖ During COP26 in Glasgow 2021 the Glasgow Pact was accepted. ❖ At COP28 in Dubai, a Loss and Damage fund was officially launched.

Current Affairs

தேசிய MSME தொழில்துறை தொகுதி விழிப்புணர்வுத் திட்டம்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை நிறுவனங்களுக்கு (MSME) நிதி அணுகலை மேம்படுத்துவதற்காக ஒரு தேசிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ஒரு தொழில்துறை தொகுதி என்பது நன்கு அடையாளம் காணக் கூடிய மற்றும், தற்போது நடைமுறைக்கு ஏற்ற, அருகமைந்த பகுதிகளில் மற்றும் ஒத்தத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் குழுவாகும். இது தொழில்நுட்பம், திறன் மற்றும் தர மேம்பாடு, சந்தை அணுகல், மூலதனத்திற்கான அணுகல் போன்ற சில பொதுவான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் MSE நிறுவனங்களின் நிலைத் தன்மை மற்றும் வளர்ச்சியை ஆதரிக்கும்.

Current Affairs

National MSME Cluster Outreach Program

❖ The Centre launched a national programme to promote financial access for micro, small and medium enterprises (MSMEs). ❖ A cluster is a group of enterprises located in an identifiable and, as far as practicable, contiguous area and producing similar products and services. ❖ This will support the sustainability and growth of MSEs by addressing common issues such as technology, skill and quality improvement, market access, access to capital etc.

Current Affairs

புத்தொழில் நிறுவனங்களின் சூழல் அமைப்பை ஆதரிக்கும் முன்னெடுப்புகள்

தமிழ்நாட்டில் புத்தொழில் நிறுவனங்களின் சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையிலான பல முன்னெடுப்புகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. முதல் முன்னெடுப்பு பெரியார் சமூக நீதி துணிகர முதலீட்டு ஆய்வகம் ஆகும்.  இது சமூக நிறுவனங்கள், பல்வேறு பருவநிலை நடவடிக்கை முன்னெடுப்புகள் மற்றும் பட்டியலிடப் பட்ட சாதியினர்/ பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் புத்தாக்க தொழில் நிறுவனர்களுக்கான பிரத்தியேக ஆலோசனை, திறன் பயிற்சி மற்றும் ஊக்கமளிப்புத் திட்டங்கள் ஆகியவற்றினை முதலீட்டிற்கு முந்தைய மற்றும் முதலீட்டிற்குப் பிந்தைய நிலைகளில் வழங்கும். மற்றொன்று தொழில் நயம் வடிவமைப்பு மையம் ஆகும்.  இது இணைய வழி வணிகத் தளங்களில் வெற்றிகரமான இடம் பெற்றிருப்பதன் மூலம் மாநிலத்தில் நேரடி நுகர்வோர் சேவை (D2C) வழங்கும் புத்தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசானது, சமீபத்தில் துபாயில் உலகளாவிய புத்தொழில் ஒருங்கிணைப்பு மையத்தினை நிறுவியது. சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவிலும் இது போன்ற மையங்கள் விரைவில் நிறுவப் படும். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற புகழ்பெற்ற GITEX நிகழ்வில் பங்கேற்க, தமிழகத்தைச் சேர்ந்த 19 புத்தொழில் நிறுவனங்களுக்கும் அரசு நிதியுதவி அளித்தது.