TIME100 இதழின் செயற்கை நுண்ணறிவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்கள் - 2024
டைம் இதழ் ஆனது, 'TIME100 இதழின் 2024 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்கள்' பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா போன்ற பல இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அஷ்வினி வைஷ்ணவ், நந்தன் நீலகேனி மற்றும் நடிகர் அனில் கபூர் உள்ளிட்ட முக்கிய இந்தியப் பிரமுகர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில், புது டெல்லி நீதிமன்றம் அனில் கபூரின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்துள்ளது.
பல்வேறு வணிக நோக்கங்களுக்காக என்று செயற்கை நுண்ணறிவினைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக ஆளுகை உரிமைகளை நன்கு பாதுகாப்பதை கபூர் வலியுறுத்தினார்.