- தேசிய இயற்கை வேளாண்மைத் திட்டத்தினை (NMNF) ஒரு முழுமையான மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாகத் தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளது.
- 15வது நிதி ஆணையத்தின் காலம் வரையில் (2025-26), இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவினம் ஆனது 2481 கோடி ரூபாய் (ஒன்றிய அரசின் பங்கு 1584 கோடி ரூபாய்; மாநில அரசின் பங்கு 897 கோடி ரூபாய்) ஆகும்.
- அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் மிகவும் சத்தான உணவை வழங்குவதற்கான இயற்கை வேளாண்மை நடைமுறைகளை மேம்படுத்துவதை NMNF ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சாகுபடிக்கான உள்ளீட்டுச் செலவைப் பெருமளவு குறைப்பதற்கும், இடுபொருட்களை வாங்குவதற்கு வெளிப்புற மூலங்களைச் சார்ந்திருப்பதனை நன்கு குறைப்பதற்கும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.