Recent Posts

View all
Oct 18, 2024 Current Affairs

கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் மேம்பாட்டு சங்கத்தின் (IACS) அறிவியல் ஆய்வாளர்கள், டைரோசில்-DNA பாஸ்போடையீஸ்ட்டிரேஸ் 1 (TDP1) எனப்படும் டிஎன்ஏ மறுசீரமைப்பு நொதியைத் தூண்டுவிப்பதன் மூலம் ஒரு புதிய சிகிச்சை முறையினை அடையாளம் கண்டுள்ளனர். * தற்போது பயன்பாட்டில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளான கேம்ப்டோதெசின், டோபோடோகன் மற்றும் இரினோடெகன் ஆகியவை டோபோயிசோமரேஸ் 1 (Top1) என்ற நொதியைத் தடுப்பதில் கவனம் செலுத்துகின்றன. புற்றுநோய் செல்கள் ஆனது பெரும்பாலும் இந்த மருந்துகளுக்கு பெரும் எதிர்ப்பை உருவாக்குவதால், முன்னணி ஆராய்ச்சியாளர்கள் சில மாற்று சிகிச்சை உத்திகளைக் கண்டறிய இது வழி வகுக்கிறது. TDP1 நொதியினைத் தூண்டுவதன் மூலமான Top1 நொதியை இலக்காகக் கொண்ட கீமோதெரபி சிகிச்சையில் இருந்து தப்பும் புற்றுநோய் செல்கள் உயிரணுப் பிரிகையின் போது சேதமடைந்த டிஎன்ஏவை சரி செய்ய உதவும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  இந்த செயல்முறையானது புற்றுநோய் செல்கள் கீமோதெரபி சிகிச்சையின் சில விளைவுகளை எதிர்க்கவும், தொடர்ந்து பெருகவும் வழி வகுக்கிறது.

Oct 18, 2024 Current Affairs

❖ The Scientists from the Indian Association for the Cultivation of Science (IACS), Kolkata, have identified a new therapeutic target by activating a DNA repair enzyme called Tyrosyl-DNA phosphodiesterase 1 (TDP1). ❖ Current anticancer drugs like Camptothecin, Topotecan, and Irinotecan focus on inhibiting the enzyme Topoisomerase 1 (Top1). ❖ Cancer cells often develop resistance to these drugs, leading the researchers to explore alternative treatment strategies. ❖ The researchers have discovered that cancer cells can survive Top1-targeted chemotherapy by activating TDP1, which helps repair damaged DNA during cell division. ❖ This process allows the cancer cells to counteract the effects of chemotherapy and continue proliferating.

Oct 18, 2024 Current Affairs

உலகளவில் பாலினத்திற்கு ஏற்ற பருவநிலை கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. பாரீஸ் உடன்படிக்கையின் 81 சதவீத ஒப்பந்தத் தரப்பினர் அவற்றின் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புகளில் (NDC) பாலினம் சார்ந்த பல நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளனர். இன்று வரை, 195 ஒப்பந்ததாரர்களின் மொத்த NDC பங்களிப்புகளின் எண்ணிக்கை 168 ஆக இருந்தது. * 62.3 சதவீத நாடுகள் அனைத்துப் பருவநிலை நடவடிக்கைகளிலும் பாலினத்தினைக் கருத்தில் கொள்வதை நெறிப்படுத்துவதற்கான நிறுவனம் சார்ந்த வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை முன் வைத்துள்ளன. * 11.5 சதவீத நாடுகள், தகவமைப்பு நடவடிக்கையின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டை ஆதரிப்பதில் ஈடுபட்டுள்ள பாலினச் சமச்சீர் குழுக்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட முன்னெடுப்புகளை முன் வைத்துள்ளன. சுமார் 55.7 சதவீத நாடுகள் பாலினச் சமத்துவத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளன. பிராந்தியத்தைப் பொறுத்து, வளர்ந்து வரும் நாடுகளின் ஒட்டு மொத்த உணவு உற்பத்தியில் பெண் விவசாயிகள் தற்போது 45-80 சதவீதப் பங்கினைக் கொண்டு உள்ளனர். வளர்ந்து வரும் நாடுகளில் பெண் தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பல வேளாண் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.